நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் & ஆலங்குளம் பசுமை இயக்கம் இணைந்துபிரம்மாண்ட விளையாட்டு விழா நடத்துகின்றன.
போட்டி விவரங்கள்
போட்டியின் சிறப்பம்சங்கள்
- தேசிய & மாநில அளவிலான திறமையான வீரர்கள் பங்கேற்கும் தனித்துவமான கபடி போட்டி
- தரம் வாய்ந்த செயற்கை ஆடுகளத்தில் நடைபெறும் மிகப்பெரிய கபடி போட்டி
- மகளிர் அணிகளின் விறுவிறுப்பு நிறைந்த ஆட்டம் – பெண்கள் அணிகளுக்கு தனி அங்கீகாரம்
- கபடி ரசிகர்களுக்கு நேரடி அனுபவம் வழங்கும் பெரிய கேலரி வசதி
- போட்டியை பார்வையிட விளையாட்டு நிபுணர்கள், தேசிய & மாநில அளவிலான வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வருகை
முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழா
போட்டியை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் முனைவர் கா.குமார் தலைமையில், பல்வேறு அரசியல் & விளையாட்டு துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் துவக்கி வைக்க உள்ளனர்.
📢 முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் சிறந்த வீரர் (Best Player) விருது போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.
தென்காசி மாவட்ட மக்களுக்கு, விளையாட்டுப் பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு! அனைவரும் அழைப்பிற்கினங்க பங்கேற்று வெற்றி வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்!
மினி மாரத்தான் :
முன்னதா தேசிய தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆலங்குளம் பசுமை இயக்கம் அறக்கட்டளை சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் முதல் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் பிப். 23 அன்று சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சாமுவேல் பிரபு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஐசக் இம்மானுவேல், பசுமை இயக்க உறுப்பினர்கள் பாலசங்கர் மற்றும் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மினி மாரத்தான் போட்டி விவரம்:
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் மினி மாரத்தான் மாறாந்தை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான 5 கிலோமீட்டர் போட்டி கரும்புளியூத்து ஆலடி அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில் 5000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழா:
வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தலைமையில், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்:
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன்
பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால்
ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் பிரவீன் குமார்
முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்க செல்வம்
பொறியாளர் துணை அமைப்பாளர் மணிகண்டன்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர்கள் இளங்கோ ஆறுமுகராஜ், ராஜதுரை
முன்னாள் கவுன்சிலர் மோகன்லால்
திமுக நிர்வாகிகள் சோனா மகேஷ், மேகநாதன், அசோக், சேர்மலிங்கம், பொன்னரசு, ஏ.பி.என். குணா, காசிபாண்டியன், பால் அருணாசலம், சுந்தர், ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், ஹரி
காங்கிரஸ் பிரமுகர் ஏசுராஜா
நிகழ்ச்சியின் இறுதியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர் ராஜதுரை நன்றியுரையாற்றினார்.
இது முதல் ஆண்டாக கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்ற நிலையில், எதிர்வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.